நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்த நோட்டுக்களை பலரும் மாற்றாமல் விட்டு விட்டனர். அப்படி நீங்களும் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் வைத்திருந்தால் இப்போது உங்களுக்காக ஒரு வாய்ப்பு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இதை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கியின் கடிதம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளும் வசதியை வெளிநாட்டினருக்கு ரிசர்வ் வங்கி மேலும் நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரலான பதிவை PIB உண்மை சரி பார்த்து செய்துள்ளது. அதாவது 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெளிநாட்டு குடிமக்களுக்கு மாற்றும் வசதியை நீட்டித்ததாக பரப்பப்பட்ட அந்த செய்தி முற்றிலும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த செய்தி முற்றிலும் போலியானது எனவும் இது தொடர்பான எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.