சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட்டை காண்பித்து போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த மூன்று மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற இடங்களுக்கு இலவசமாக செல்லலாம். இந்த சலுகை குளிர்சாதன பேருந்துகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.