மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக திடீரென்று பாஜக கூட்டணியில் இணைந்து அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது. பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகின்றது. இந்த நிலையில் அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பாமகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது பாமகவிற்கு தேசியமும் இல்ல.. தமிழும் இல்ல.. வெறும் குடும்பம் தான்.. டப்புதான் வேறொன்றும் அவர்களுக்கு முக்கியம் இல்லை என்று விமர்சித்துள்ளார்.