திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட, ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம் என நடிகை சுஹாசினி கூறியுள்ளார். தான் பெற்றோர்கள் கூறியபடி திருமணம் செய்ததாக கூறிய அவர், மாலத்தீவில் திருமண ஜோடிகள் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே மேரேஜ் சர்டிபிகேட் தருவதாகவும் கூறினார். தலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், இக்கருத்தை முன்வைத்தார்.