ராஜபுத்திரர்கள் தொடர்பாக கூறிய கருத்துக்கு, 2ஆவது முறையாக மத்திய அமைச்சர் ரூபாலா மன்னிப்பு கோரியுள்ளார். பரப்புரையில் பேசிய அவர், ராஜபுத்திரர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்ததாக குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ராஜபுத்திர சமூகத்தினர், பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக ரூபாலா, ஏற்கெனவே மன்னிப்பு கேட்ட நிலையில், அதனை ராஜபுத்திர மக்கள் ஏற்கவில்லை