உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் பண்டேபூர் பகுதியில் 10ம் வகுப்பில் பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் பள்ளியளவில் முதலிடம் வரமுடியாத விரக்தியால் சாஷி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலிடம் பிடித்தவருக்கும் சாக்ஷிக்கும் 3 மதிப்பெண்கள் மட்டுமே வித்தியாசமாக இருந்துள்ளது. மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதை போலீசாருக்குத் தெரிவிக்காமல் அவரது பெற்றோர்கள் இறுதிச் சடங்குகளை செய்துள்ளனர்.