இலங்கையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 3600 வகையான அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல் பசு, ஆமை, நட்சத்திர மீன்கள், டால்ஃபின்கள் போன்றவை காணப்படும். இந்நிலையில் இலங்கை மன்னர் பகுதியில் ஆமை ஒன்று ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் 160 கிலோ எடை கொண்ட ஆமை கண்டுபிடிக்கப்பட்டது. அரிய வகை ஆமையை இறைச்சிக்காக பதுக்கி வைத்திருந்தவர்களிடமிருந்து மீட்ட அதிகாரிகள் வீட்டில் இருந்தவர்களை கைது செய்தனர்.