பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதியில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் பெஷாவர் மற்றும் டைமர்கெரா பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.