ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் அமைச்சரான பிரிஷின் படேல் பீகார் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணிற்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி குறிப்பிட்ட பெண் ஒருவர் ஆர்ஜேடி கட்சியில் சேர வேண்டும் என்றும் தான் எம்எல்ஏ ஆக வேண்டும் என்றும் கேட்டதாக குறிப்பிட்டு தான் அதற்கு கட்சியின் அடிமட்டத்திலிருந்து அதற்கு உழைக்க வேண்டும் என்று கூறியதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்தப் பெண் இரண்டு பெண்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து வாட்ஸப்பில் அனுப்பி விட்டு 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.