திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் பணியில் சேர்வதற்கு தேவஸ்தானம் போர்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆகம விதிப்படி பிரசாதம் தயாரிப்பில் ஐந்து ஆண்டு அனுபவம் வேண்டும் என்பதோடு வைஷ்ணவ பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வேலைக்கு மாத சம்பளமாக 21,139 ரூபாய் வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.