உத்தர் பிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்த கூடுதல் காவல் காணிப்பாளரின் 10 வயது மகன் நமீஷ் கிருஷ்ணா. நேற்று காலை நமீஷ் கிருஷ்ணா தனது பயிற்சியாளர் உடன் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த வெள்ளை நிற எஸ்யூவி ஒன்று சிறுவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நமீஷ் கிருஷ்ணா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில் சரத் சிங், தேவ்ஸ்ரீ வர்மா என இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.