டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்தா பாங்காக்கில் இருந்து வந்த நபர் ஒருவரிடம் சோதனை செய்த போது சிறிய பால் பாக்கெட்களில் மறைத்து வைத்து நான்கு கிலோவுக்கும் அதிகமான (4204 கிராம்) தங்க கட்டிகள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
On the basis of profiling, Customs@IGI Airport have seized gold bars weighing 4204GMs valued at 2.24 Crores brought by One Indian national from Bangkok. The pax has been arrested under Customs Act, 1962. Further, investigations are underway. pic.twitter.com/qOQTd0uwGj
— Delhi Customs (Airport & General) (@AirportGenCus) November 20, 2023
அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 2.24 கோடி என கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பான காணொளியை தங்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.