ஆந்திராவில் பள்ளி குழந்தைகள் சென்ற ஷேர் ஆட்டோ, லாரி மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் அருகே வந்து கொண்டிருந்த லாரி மீது எங்கிருந்தோ புயல் வேகத்தில் வந்த ஷேர் ஆட்டோ ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.