உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று நவம்பர் 25 சனிக்கிழமை முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில் பல்வேறு நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.