குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் (86), உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி தனது X பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று நாடு முழுவதும் ஒருநாள் மவுனம் கடைபிடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று அரசு கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.