சமூக வலைதளங்களில் ஒளிபரப்பாகும் ஆபாசக் காட்சிகளை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி இணையதளங்களில் ஒளிபரப்பாகும் வெப் சீரியல்களில் ஆபாசக் காட்சிகள் மற்றும் வசனங்கள் தற்போது அதிகமாகி வருகின்றன.

இதுபோன்ற ஆபாசக் காட்சிகளால் இளைஞர்கள் மட்டுமின்றி சிறு வயது குழந்தைகளும் தவறான வழிக்கு செல்லும் ஆபத்து இருப்பதால், தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.