மகாராஷ்டிராவில் காதலியை கார் ஏற்றி காதலன் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் அனில் கெய்க்வாட். இவரது மகன் அஸ்வஜித் கெய்க்வாட். அஸ்வஜித்தும் பிரியா என்ற இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களுக்குள் திடீரென சண்டை ஏற்பட்ட நிலையில், காதலியை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது பிரியா தப்ப முயன்றபோது தனது டிரைவரை வைத்து கார் ஏற்றி கொல்ல முயன்றுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பிரியா சிகிச்சை பெற்று வருகிறார்.