சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ, தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் பொது இடத்தில் பிறரை மிகக் கொடூரமாக வசைபாடுவதோடு, மற்றவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிக்க வைப்பதற்காக, தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொள்ளும் பகீர் காட்சி பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் பார்ப்பவர்களை உறைய வைக்கும் வகையில் உள்ளதோடு, இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் உண்மைச் சம்பவங்கள் எந்த அளவிற்கு அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இதுவொரு சான்றாக அமைந்துள்ளது.

“>

இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, இணையதளப் பயன்பாட்டாளர்கள் பலரும் ஆண்களின் பாதுகாப்பு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர்கள் அந்த நேரத்தில் தங்களது மொபைல் போனில் இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்யாமல் இருந்திருந்தால், அவர்கள் எந்தத் தவறும் செய்யாமல் இன்று சிறைக்குச் சென்றிருக்க நேரிடும் என்று நெட்டிசன்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரண மனிதன் தான் நிரபராதி என்று நிரூபிப்பதற்குக் காவல் துறையினர் பயன்படுத்துவது போன்ற ‘பாடி கேமரா’ மட்டுமே ஒரே புகலிடமாக மாறியுள்ளது என்றும் மக்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.