சமூக வலைத்தளங்களில் மனிதர்களுக்கும் விலங்கு, பறவைகளுக்கும் இடையேயான அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்கள் எப்போதும் மக்களின் இதயங்களைக் கவர்ந்து வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு காக்கா மற்றும் ஒரு கிராமத்துப் பெண்ணிற்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும் அந்த வீடியோவில், ஒருவரின் மடியில் ஒரு காகம் மிகவும் நிம்மதியாக படுத்துக் கிடக்கிறது. அந்தப் பெண் தன் கைகளால் காகத்திற்கு செல்லமாக குதூகலம் மூட்டுகிறார். ஒரு குழந்தை தன் தாயின் மடியில் படுத்துக் கொண்டு விளையாடுவதைப் போல, அந்த காகமும் எந்தவொரு பயமும் இல்லாமல் அவரது அன்பை ரசித்து அனுபவிக்கிறது.

“>

இதனால் பொதுவாக காகங்கள் மனிதர்களைக் கண்டால் பயந்து பறந்துவிடும் குணம் கொண்டவை. ஆனால், இந்த வீடியோவில் உள்ள காகம் அந்தப் பெண்ணை தன் தாயாகவே நினைத்து, அவரது மடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு, அவர் செய்யும் குதூகலத்தை ரசிப்பது பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.

இந்நிலையில் “மிரள வைக்கும் காகத்தின் இந்தச் செயல்” மற்றும் அவர்களின் தூய்மையான அன்பு நெட்டிசன்களின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பறவைகளிடமும் அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, தற்போதைய டிஜிட்டல் உலகில் பலராலும் ரசிக்கப்பட்டு, இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.