ஹைதராபாத்தில் வீட்டை விட்டு புறப்பட்ட ஐந்தே நிமிடங்களில், 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டொயோட்டா இன்னோவா கார் மோதி செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தினசரிப் பணிக்குச் செல்வதற்காக அந்த செவிலியர் தனது வீட்டிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே, கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார் அவர் மீது பயங்கரமாக மோதியுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

“>

இதனால் இவ்விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது ஓட்டுநர் உரிமம் பெறாத 17 வயதுடைய ஒரு மைனர் சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. போதிய முதிர்ச்சியோ, சட்டப்பூர்வ உரிமமோ இல்லாத சிறுவர்களிடம் வாகனங்களை ஓட்டக் கொடுப்பதால் ஏற்படும் பேராபத்தை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

இந்த அலட்சியமான செயலால் ஒரு மருத்துவப் பணியாளரின் விலைமதிப்பற்ற உயிர் பறிபோயுள்ள நிலையில், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், காரை ஓட்டிய சிறுவன் மற்றும் அவரிடம் வாகனத்தைக் கொடுத்த அவனது பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் மீது சட்டப்படியான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.