ஜெய்ப்பூரின் மாளவியா நகரில் உள்ள கௌரவ் டவர் பகுதிக்கு வெளியே, இளம் பெண் ஒருவர் பொது இடத்தில் ஆடைகளைக் களைந்து, கேப் ஓட்டுநர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணை மீண்டும் காருக்குள் ஏற்றுவதற்கு ஓட்டுநர் முயன்றபோது, அவர் ஓட்டுநரைத் தாக்கத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், ஒரு கல்லை எடுத்து காரின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்த பொதுமக்களால் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

“>

இதனால் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜவஹர் சர்க்கிள் காவல் நிலைய போலீஸார், அந்தப் பெண்ணை மீட்டு ஜெய்ப்பூரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி மற்றும் மருந்துகளை வழங்கினர். பின்னர் அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அபராஜிதா மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும், அவர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள மறுத்துவிட்டார்; மேலும் இந்தத் தொடர்பாக இருதரப்பிலிருந்தும் எந்தவொரு முறையான புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை. தற்போது அந்தப் பெண் தனது நண்பர்களுடன் ஜெய்ப்பூரை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், போதை காரணமாக அந்தப் பெண் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும், ஆனால் ஒரு பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர்கள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் டாக்டர் அர்ச்சனா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.