தமிழகத்தில் ஒவ்வொரு அரையாண்டுக்கு ஒரு முறை சொத்து உரிமையாளர்களிடம் சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. அதே சமயம் ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை அதாவது சொத்து முறையில் 5% அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் குடிநீர் பரி மற்றும் சொத்துவரி போன்ற வரிகள் செலுத்துவதற்கு கியூ ஆர் கோடு மாநகராட்சி சார்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடுகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள கியூ ஆர் கோடு மூலமாக பொதுமக்கள் ஸ்கேன் செய்து சரியான தொகையை செலுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.