மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இந்நிலையில், விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார் விசிக தலைவர் திருமாவளவன்.

அப்போது “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்களிடையே செல்வாக்கு உயரும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை இனி எந்த ஒரு ஆட்சியாளரும் நிறுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.