காலநிலை மாற்றத்தால் இனி வரும் காலங்களில் தென் மாவட்டங்களில் இது போன்ற மிகப்பெரிய அதிக கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழைக்கு வளிமண்டல சுழற்சி தான் காரணம், மேக வெடிப்பு இல்லை என்றும் 1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் மக்கள் அவதிக்குள்ளான நிலையில் இந்த வாரம் நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.