தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தீவிர கனமழை காரணமாக நாளை அதாவது டிசம்பர் 19ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வெள்ளம் வடிந்த பிறகு அரையாண்டு தேர்வுகள் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.