நெல்லை டவுன் பகுதியில் கான்க்ரீட் வீடு வெள்ளத்தால் இடிந்து விழுந்த நிலையில் ‘எல்லாம் போச்சே’ என அந்த குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில் கன்மாய் உடைந்து வெள்ளபெருக்கு ஏற்பட்டு, வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். தாமிரபரணி, மணிமுத்தாறு, பாபநாசம் உள்ளிட்ட ஆறுகளின் உபரி நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதனிடையே மாவட்ட நிர்வாகங்கள் மீட்பு பணிகளை முழுவீச்சில் துரிதப்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் 9 அமைச்சர்களை நியமித்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.. மேலும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது.. இந்த 4 மாவட்ட மக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பயங்கர கனமழையால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சில வீடுகள் இடிந்து விழுந்தும் வருகிறது.. இந்நிலையில் நெல்லை டவுன் பகுதியில் கான்க்ரீட் வீடு வெள்ளத்தால் இடிந்து விழுந்த நிலையில் ‘எல்லாம் போச்சே’ என அந்த குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..