தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்கள் தொடர் கனமழைக்கு பிறகு தென் மாவட்டங்களில் மழை பொழிவு சற்று குறைந்துள்ளது. மேலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 10 மணி வரை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை மட்டுமே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி அப்பகுதி மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.