தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவை இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைகளுக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு பேருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.