மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி துலாக் கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் ஐப்பசி மாதம் நடைபெறும் நிலையில் இந்த விழாவில் முக்கிய நிகழ்வான கடை முக தீர்த்தவாரி உற்சவம் இந்த வருடம் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கிய தினத்தன்று மாவட்டத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் நவம்பர் 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

அத்தியாவசிய அரசு அலுவலகங்கள் மற்றும் கருவுலக பணிகளுக்கான ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படும் என்றும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 25ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.