சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) கேரளாவில் சபரிமலை யாத்திரைக்கு வசதியாக நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை சிறப்புப் பேருந்து சேவைகளைத் தொடங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்  அல்ட்ரா டீலர்ஸ்,  இடைநில்லா பேருந்து,  ஸ்லீப்பர் மற்றும் ஏசி வசதிகளை கொண்ட சிறப்பு பேருந்துகளை இயக்க முன்வந்துள்ளது. 

இவை சென்னை,  திருச்சி,  மதுரை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து புறப்படும்.  இவை தவிர்த்து பிற மாவட்டங்களிலும்  கோரிக்கை எழுந்து வரும் நிலையில்,  அப்பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து கழகம்  மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தமிழகத்திலிருந்து கேரளா சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால்,  ஐயப்பன் பக்தர்களிடையே இது வரவேற்பை பெற்றுள்ளது.