உலகப் புகழ்பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் நடப்பு ஆண்டு கொடியேற்றத்துடன் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நாளான ஆடி தபசு விழா நடப்பு ஆண்டில் ஜூலை 31ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது. இந்த தினத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்ய வருவார்கள். இதனால் அங்கு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளாக ஜூலை 31ஆம் தேதி அதாவது நாளை தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.