சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் சார்பதிவாளர் ராஜமாணிக்கம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கொரட்டூர் ஏரி உள்வாய் இடத்தில் அரசுக்கு சொந்தமான 1,316 சதுர அடிக்கு போலியான பட்டா தயாரித்து சூளைமேட்டை சேர்த்த ராஜகுமாரி, அவரது மகன் சதீஷ் ஆகியோர் அந்த இடத்தை அபகரித்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான தாய், மகனை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் ராஜகுமாரி, சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல கொரட்டூர் ஏரி உள்வாய் பகுதியில் 1,326 சதுர அடி இடத்தை ஜெயராமன் என்பவர் தனது மகள் ராதா பெயரில் போலியான பட்டா தயாரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.