சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஜோதிபாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இவர்களது மகள் தனன்யாவுக்கு வீட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ரம்யா தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டார். அவர் தோழி வீட்டுக்குள் செல்லவில்லை. வீட்டிற்கும் திரும்பி வரவில்லை.

இதற்கிடையே ஆவடி- அண்ணனூர் ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் மின்சார ரயிலில் அடிபட்டு ரம்யா சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரம்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரம்யா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழந்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.