காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.கே தெருவில் சகோதரிகளான லட்சுமிபாய், பத்மாபாய் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியதாவது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் எங்களுக்கு சொந்தமான தலா 1083 சதுர அடியில் இரண்டு வீடுகள் அமைந்துள்ளது. சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகளை அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி அவரது மகன் அன்பு மற்றும் சுசிலா ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வீடுகளை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கலைச்செல்வி, அன்பு ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.