ஒவ்வொரு மாதமும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதற்கு ஐ எஃப் எஸ் ஆர் எம் எஸ் என்ற தளத்தில் தகவல்களை 15 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மாதம் இரண்டு நாட்களிலேயே இந்த தளத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஆசிரியை ஒருவர், இந்த ஆண்டு போதிய நிதி இல்லை எனக் கூறி இந்த தளத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்று பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.