அதிமுகவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இரண்டு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்டிருக்கின்றனர். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு யார் போட்டியிடுவது என்ற குழப்பமும் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், எம்ஜிஆர்,ஜெயலலிதா இணைந்து 50 ஆண்டுகாலம் தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கிய இந்த இயக்கத்தில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும் தொண்டர்களின் கோரிக்கையும் ஆகும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக நலனுக்காக எடப்பாடி பழனிச்சாமி உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனால் இபிஎஸ் இணங்கி வந்தால் அதிமுக விரைவில் ஒன்று கூடும் என தெரிகிறது.