மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ வெளியானது அடுத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இதற்கு தமிழ் பிரபலங்களும் தாங்க முடியாத துயரத்தோடு சமூக வலைதளங்களில் மனம் திறந்து உள்ளனர். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா, நான் படித்ததை என்னால் நம்பவே முடியவில்லை, இந்த கொடூர சம்பவம் மனதை குலைக்கிறது.

சொல்வதற்கு மிகுந்த வருத்தமாக இருந்தாலும், இந்த உலகில் என்னதான் நடக்கிறது” என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. மேலும் “பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் இதயபூர்வமாக நான் நிற்கிறேன்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என ராஷ்மிகா தெரிவித்தார். இதனையடுத்து பல பிரபலங்களும் மணிப்பூர் கொடூரம் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.