மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ வெளியானது அடுத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ் நடிகர், நடிகைகள் பலரும் தாங்க முடியாத துயரத்தோடு சமூக வலைதளங்களில் மனம் திறந்து உள்ளனர். அந்த வகையில் மணிப்பூர் கலவரத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் டிவிட்டர் பதிவில், “மணிப்பூர் பெண்கள் – இந்த சமூகம், இனம், மனிதநேயம் என அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. மனிதர்களாகிய நாம் இந்த செயலை நேர்மையுடன் கண்டிக்க வேண்டும். பல்வேறு கொடூரங்களுக்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. ஊடகங்களை முடக்குவது பிரச்சனையில் உள்ள மக்களுக்கு உதவாது” எனக் கூறியுள்ளார்.