இந்திய ராணுவம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உடல் தகுதி குறைந்து வருவதை கருதி புதிய உடற்பயிற்சி கொள்கையை கொண்டு வந்துள்ளது. அதன்படி இராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் இதற்காக ராணுவ வீரர்களை மேம்படுத்த 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய கொள்கையின் படி 30 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அதிக எடை கொண்ட ராணுவ வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.