இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,890 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பின்னர்  அதாவது 149 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை பாதிப்புகள் ஏற்படுவது இதுவே முதல்முறை ஆகும்.  கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 5,30,831 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4.47 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.