சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. நாம் விரும்பிச் சாப்பிடும் அவல் (Poha) எப்படித் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்படுகிறது என்பதை அந்த வீடியோ காட்டுகிறது. அதில், இரண்டு நபர்கள் மலைபோல் குவிந்து கிடக்கும் அவல் மீது சாதாரணமாக அமர்ந்து கொண்டு, அவற்றை பாக்கெட்டுகளில் அடைக்கின்றனர். துப்புரவு மற்றும் சுகாதாரம் என்பது துளிக்கூட இல்லாமல், அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்தே அவலை அள்ளி பேக் செய்வது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
The packaging may look premium and appealing, giving the impression of high-quality poha. However, the extremely unhygienic way in which it is being packed is deeply disturbing.
Where is our food safety authority, Food Safety and Standards Authority of India (FSSAI), and where… pic.twitter.com/dpHMEXw80G— The Nalanda Index (@Nalanda_index) February 18, 2026
இந்த வீடியோ ‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்டதில் இருந்து வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்ஃபொன்ஸ்கள் “இனிமேல் அவல் சாப்பிடுவதையே நிறுத்திவிட வேண்டியதுதான்” என வேதனையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். உணவு பாதுகாப்புத் துறையினரை டேக் செய்து, இது போன்ற சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
