சமூக வலைதளங்களில் பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஒரு சிறுமி படிக்கட்டில் ஏறிச் செல்லும் போது, எதிர்பாராத விதமாகச் சமநிலை தவறி படிக்கட்டு ஓரத்தில் இருக்கும் ஸ்டீல் கம்பிகளுக்கு இடையே உள்ள இடைவெளி வழியாகத் தலைகீழாகக் கீழே விழுகிறாள். இதைப் பார்ப்பவர்களின் மூச்சே ஒரு நிமிடம் நின்றுவிடும் அளவுக்கு அந்த விபத்து மிகக் கொடூரமாக இருக்கிறது. யாருமே அந்தச் சிறுமியைப் பிடிக்க முடியாத அளவுக்கு மிக உயரத்தில் இருந்து அவள் கீழே விழுகிறாள்.
Real Life Hero 🔥💪
भगवान ने पहले ही 1 रक्षक इंतजाम किया था pic.twitter.com/0crnSSbGdg
— Mahendra Bahubali 🇮🇳 (@Bahubali_IND2) February 17, 2026
ஆனால், அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த ஒரு நபர், கடவுள் அனுப்பிய தேவதூதனைப் போலச் செயல்பட்டார். சிறுமி கீழே விழுவதைப் பார்த்த அடுத்த நொடியே, மின்னல் வேகத்தில் தன் கைகளை நீட்டி அந்தச் சிறுமியை அப்படியே அந்தரத்தில் ஏந்திப் பிடித்தார். ஒருவேளை அவர் மட்டும் ஒரு செகண்ட் தாமதித்திருந்தாலோ அல்லது அங்கேயே இல்லாமல் இருந்தாலோ, அந்தச் சிறுமிக்கு என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த மனிதரின் துரிதமான செயல்பாடும் துணிச்சலும் ஒரு பிஞ்சு உயிரைக் காப்பாற்றியுள்ளது.
