விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்துகொண்டு , அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்யக் கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் காட்டமாக அறிவுறுத்தியுள்ளது. மேலும், விசாரணைக்கு அழைத்ததும், குற்றம் சாட்டப்பட்டவர் தானாக வந்து குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும், ஒப்புக்கொள்ள மறுத்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என அமலாக்கத்துறை கூறுவதும் தவறு.
உச்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட அமலாக்கத்துறை, பழிவாங்கும் வகையில் செயல்படக் கூடாது என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்; அதனை பூர்த்தி செய்யும் வகையில் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.