உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் அடுப்பு மற்றும் முதல் சமையல் எரிவாயு உருளை இலவசமாக அளிக்கப்படுகிறது. அதன்பிறகு பயனாளிகள் தங்களுக்கு தேவையான எரிவாயு உருளைகளை தாங்களே வாங்கிக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் சமீபத்தில் ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு முன்பாக உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு உருளைக்கு 200 ரூபாய் மானியம் என மத்திய அரசு முடிவு செய்தது.

ஆகவே சமையல் எரிவாயு உருளையின் விலை 200 ரூபாய் குறைந்தது. தற்போது மானியத்தை 300 ரூபாயாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான முடிவு இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு எரிவாயு உருளையின் விலை மேலும் 100 ரூபாய் குறைவதாக மத்திய அமைச்சரர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.  தேர்தல் வரும் காலமாக இருக்கும் இந்த சமயத்தில் மேலும் சலுகை பெண்களுக்காக மத்திய அரசு அறிவித்துள்ளது.