மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்றால் ஒரு வாரத்தில் திமுக ஆட்சியை கலைப்பார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், மோடி மீண்டும் பிரதமர் ஆனால் தேர்தல்கள் நடக்காது. மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படும். இந்நாட்டையும் மக்களையும் காப்பாற்ற இந்தியா முழுவதும் INDIA கூட்டணி வெற்றி பெற வேண்டும் என கூறியுள்ளார்.