மகாராஷ்டிராவின் பாஜக தலைவர் தைரியஷீல் மோஹிதே பாட்டீல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். மாதா தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால், கட்சியில் இருந்து விலகிய அவர், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது