திண்டுக்கல், பழனி அருகே சத்துணவு பெண் பணியாளருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கர்நாடகாவில் பதுங்கி இருந்த பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரனை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். இன்று சிறைக்கு கொண்டு சென்றபோது, அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவரை போலீசார், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.