விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளுடன் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் தற்போது இருக்கும் பெற்றோர்கள் எப்படி பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வாதம் நடைபெற்று உள்ளது.

அதில் பாட்டி ஒருவர் பேரப்பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுப்பது முதல் அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பது வரை எங்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் கருவுற்றல் முதல் பிள்ளையை பெற்றெடுப்பது வரை நீங்கள் கொடுக்கும் தொல்லை தாங்க முடியவில்லை என்று கோபமாக பேசியுள்ளார். அதற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது முதல் இணையத்தில் அனைத்திற்கும் பதில் உள்ளது என்று ஒரு தகப்பன் கூறியுள்ளார். இதனைக் கேட்ட கோபிநாத் உடனே பெற்றோர்களிடம் இருக்கும் பைத்தியக்காரத்தனங்களில் இதுவும் ஒன்று என்று வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.