பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் மற்றும் மெட்டி ஒலிவுட் லிட்டர் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்த இவர் அதன் பிறகு மிஸ்டர் தமிழ்நாடு 2022 பட்டம் வென்ற அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் அவரது கணவர் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவரது கணவர் இறந்து ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில் தனிமையில் இருந்து வந்த ஸ்ருதி தற்போது தன்னுடைய கவலைகளை மறக்கவும் தன்னுடைய துக்கத்தை இயற்கையுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் காட்டுக்குள் சென்று அங்கு வனவிலங்குகளை புகைப்படம் எடுத்துள்ளார். அவ்வாறு பயணம் செய்யும்போது தன்னுடைய கணவரின் புகைப்படத்தையும் வைத்துக்கொண்டு அவருடன் கடந்து செல்வது போல வீடியோ எடுத்து அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sruthi Shanmuga Priya இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sruthi_shanmuga_priya)