கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் எம்.ஜி.ஆர் லேஅவுட் பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் ராஜனின் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ராஜன் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.